மட்டக்களப்பு மாவட்டத்தில் 22928 பேர் பரீட்சைக்குத் தோற்றினர் | கொரோனா அச்சத்தலுக்கு மத்தியிலும் கிழக்கில் அமைதியான முறையிலக.பொ.த. சா தரப் பரீட்சைகள் ஆரம்பம்

Date:

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் கல்விப பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இன்று பரீட்சைகள் கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பமாகின.

மட்டக்களப்பு மவட்டத்தில் இம்முறை 22928 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.இதற்கென 159பரீட்சை நிலையங்களும் 14 இணைப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பரீட்சை இணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 12671 பேரும் பாடசாலை பரீட்சார்த்திகள் 10257பேரும் பரீட்சைக்குத் தோற்றினர்.11900பெண் மாணவிகளும் 11028 ஆண் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மவட்டத்தில் சகல பரீட்சை நிலையங்களிலும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை தந்திருந்தனர்.கைகளை கழுவி சமுக இடைவெளிகள் பேணப்பட்டு பரீட்சை மண்டபத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
பரீட்சை நிலையங்களில் அதிகமான பொலிசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டதுடன் பொதுச் சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு நிருபர்

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...