கொவிட் தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்கள் கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்

Date:

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சரவை பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை பொறுப்பேற்று, அடக்கம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இரணைதீவுக்கு உடல்களை கொண்டு செல்வதற்கான அனைத்து செலவீனங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அமைச்சரவை பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எட்டியதில், அரசாங்கம் தலையீடு செய்யவில்லை எனவும், சுகாதார தரப்பினரே அதற்கான தீர்மானத்தை எட்டியதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...