கண்டாவளை பிரதேசசெயளார் பிரிவுக்குற்ப்பட்ட கல்மடு தருமபுரம் பெரியகுளம் முரசுமோட்டை உரியான் போன்றபகுதிகளில் நாளாந்தம் கட்டுயானைகளின் அளிவுகள் அதிகரித்தவண்ணம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை1.30 மனியலவில் தருமபுரம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுல் புகுத்தயானை இரண்டு நாட்களுக்கு முன்னர் 12 தென்னைமரங்களை அளித்துள்ளது.
பின்னர் நேற்றையதினமும் 5 பயன்தரக்கூடிய அலவிலான தென்னைமரங்களை முற்றாக அளித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவளுக்கமைய வனஜீவராசிகள் தினைக்களத்தின் உத்தியொகஸ்தர்கள் சம்பவயிடத்திற்கு சென்றிருந்தனர்.
அவர்கள் யானை வெடி மூலம் யானைகளை விரட்டியடித்தனர் . இப்படி தினமும் நடைபெறுவதால் அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக நேற்றையதினம் கண்டாவளை பிரதேசசெயளரினால் யானை வெடிகள் தற்பாதுகாப்பிற்காக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் குறித்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒர் நிரந்தரத்தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி நிருபர்
சப்த சங்கரி