கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு

Date:

கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு

கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களின் சுகாதாரத்தை கருத்திற்க் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று (04) காலை நடைபெற்றது

மருத்துவ முகாம் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி அவர்களின் ஏற்பாட்டில் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமையாட்டுகின்ற ஆண், பெண் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் ஆயுர்வேத மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடற்ப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆயுர்வேத மருந்து வகைகளை பெற்றுக் கொண்டனர்

இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் , குருதி அழுத்தம் மற்றும் கொலோஸ்ரோல் பரிசோதனைகள் இலவசமாக செய்ப்பட்டது

நடுத்தீவு மாவட்ட ஆயுர்வேத வைத்திய சாலை பொறுப்பதிகாரி வைத்தியர் Dr.மாஸாத், ஆயுர்வேத சமூக வைத்தியர் Dr. நஸ்மி , மற்றும் வைத்தியர் Dr. பெளமிதா, ஆகியோர் கலந்துகொண்டு வைத்திய ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்கி வைத்தனர்.

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா நிருபர்

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...