சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிறப்பு நிகழ்ச்சி

Date:

மார்ச் 08 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று முதன் முதலாக இன்று இடம் பெற்றது.  திணைக்களப் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தலைமையில் திணைக்கள அலுவலர்களுக்கு விஷேட சொற்பொழிவு நிகழ்வுகள் இடம் பெற்றன.

சிங்கள மொழி எழுத்தாளர்களை ஊக்குவித்தல் எனும் தலைப்பின் கீழ் சிங்கள மொழி மூலம்  நாவலாசிரியரும், எழுத்தாளருமான திருமதி. ஸனீபா ஸனீர்  அவர்களும்இ ஆண் பிள்ளைகளை எப்படி  வளர்த்தல்  எனும் தலைப்பின் கீழ் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. பரீனா ருஸைக்  அவர்களும்  சகவாழ்வு எனும் தலைப்பில் ஆங்கில மொழி மூலம் உலக சமாதான நிறுவனத்தித்தின் இளைஞர் தூதுவர்  செல்வி. ஆமினா முஹ்ஸின் அவர்களும் இ பெண் ஊடகவியலாளர்களின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் டெய்லி மிரர் பத்திரிகையின் பதிப்பாசிரியர் செல்வி. பியூமி பொன்சேகா (இவர் இணைய வழியூடாக விரிவுரை வழங்கஜனார்)   அவர்களும்  நவீன சமூகத்தில் பெண்களின் சவால்கள் மற்றும் பெண்களை வலுவூட்டல் எனும் தலைப்பில் தமிழ் மொழி மூலம் வழக்கறிஞர் திருமதி. சுகந்தி ராஜகுலேந்திரா அவர்களும் சொற்பொழிவாற்றினர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Popular

More like this
Related

சவூதி மரண தண்டனையிலிருந்து மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி...

சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: அரசாங்கம் உடனடியாக தலையிட சாணக்கியன் எம்.பி அவசர கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் சிவராசா...

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன...

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை  29...