சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிறப்பு நிகழ்ச்சி

Date:

மார்ச் 08 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று முதன் முதலாக இன்று இடம் பெற்றது.  திணைக்களப் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தலைமையில் திணைக்கள அலுவலர்களுக்கு விஷேட சொற்பொழிவு நிகழ்வுகள் இடம் பெற்றன.

சிங்கள மொழி எழுத்தாளர்களை ஊக்குவித்தல் எனும் தலைப்பின் கீழ் சிங்கள மொழி மூலம்  நாவலாசிரியரும், எழுத்தாளருமான திருமதி. ஸனீபா ஸனீர்  அவர்களும்இ ஆண் பிள்ளைகளை எப்படி  வளர்த்தல்  எனும் தலைப்பின் கீழ் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. பரீனா ருஸைக்  அவர்களும்  சகவாழ்வு எனும் தலைப்பில் ஆங்கில மொழி மூலம் உலக சமாதான நிறுவனத்தித்தின் இளைஞர் தூதுவர்  செல்வி. ஆமினா முஹ்ஸின் அவர்களும் இ பெண் ஊடகவியலாளர்களின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் டெய்லி மிரர் பத்திரிகையின் பதிப்பாசிரியர் செல்வி. பியூமி பொன்சேகா (இவர் இணைய வழியூடாக விரிவுரை வழங்கஜனார்)   அவர்களும்  நவீன சமூகத்தில் பெண்களின் சவால்கள் மற்றும் பெண்களை வலுவூட்டல் எனும் தலைப்பில் தமிழ் மொழி மூலம் வழக்கறிஞர் திருமதி. சுகந்தி ராஜகுலேந்திரா அவர்களும் சொற்பொழிவாற்றினர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...