ஹஜ்ஜுல் அக்பர் ஏன் கைது செய்யப்பட்டார் | DIG அஜித் ரோஹண!

Date:

இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரங்களை முன்னெடுத்தமை தொடர்பில் ஜமா-அத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் வஹாபிசம் மற்றும் ஜிஹாத் தொடர்பான கருத்துக்களை பரப்பியமை தொடர்பில் தெமட்டகொடை பகுதியில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாவனெல்ல – முருதவெல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பவராவர்.

ஜமா – அத்தே இஸ்லாமிய அமைப்பினால் வெளியிடப்படும் ‘அல் ஹஸனாத்’ சஞ்சிகையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அடிப்படைவாத எண்ணங்களை தோற்றுவிக்கும் வகையில் குறித்த சந்தேக நபர் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் தொடர்ச்சியாக கருத்துகளைத் தெரிவித்து வந்தமை மற்றும் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியமை தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளார் என்றார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...