புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளமை இனவெறி நிகழ்ச்சி | முஸ்லீம் கவுன்சில் தெரிவிப்பு

Date:

புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளதை இனவெறி நிகழ்ச்சி நிரல் என முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது என அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளது. இது இனவெறி நிகழ்ச்சி நிரல் என இலங்கையின் முஸ்லீம் கவுன்சிலின் ஹில்மி அகமட் தெரிவித்துள்ளார் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

அவர்கள் தாங்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என சிங்களவர்களிற்கு வலியுறுத்த விரும்புகின்றனர் என ஹில்மி அகமட் அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளார்.
புர்காவை பெண்கள் தங்களிற்கு விருப்பமான உடையை அணிவதற்கு உள்ள உரிமையாக இதனை கருதவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த 350 பேரின் உடல்களை அவர்களின் மத நம்பிக்கைகளை மீறி அவர்கள் தகனம் செய்தனர், தற்போது அவர்கள் புர்காவையும் மத்ரசாக்களையும் தடை செய்ய முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்ராசாக்களின் நோக்கத்தை போன்ற நோக்கத்தை கொண்ட பௌத்த கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிற்கு எதிராக இந்த நடவடிக்கைகளை எடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...