இலங்கையின் பேசும் பொருளாக மாறியுள்ள யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்து!

Date:

இறக்குவானை பகுதியைச் சேர்ந்த யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்தே இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது அதன்படி ,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்குப்பற்றிய பாக்யா அபேரத்ன என யுவதி குறித்தே இன்று அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

இதன்படி ,தனது குடும்பத்தினர் மற்றும் அவரது சொத்துக்கள் குறித்து தனது கிராமவாசிகளிடம் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பாக்யாய அபேரத்ன எனும் யுவதி தெரிவித்தார்.

இறக்குவானையை அண்மித்துள்ள சிங்கராஜ வனப் பகுதியில் இடம்பெற்று வரும் காடழிப்பு குறித்து, குறித்த அந்த நிகழ்ச்சியில் பாக்யா தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அந்த தகவலை அடுத்து, பாக்யா தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அவர் சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகில் சூழல் மாசடையும் விதத்தில் கட்டுமானப் பணியில் உள்ள ஒரு ஹோட்டல் பற்றி குறித்த நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார்.
மேலும் இதுதொடர்பில் பொலிஸார் தனது வீட்டிற்கு வந்து அப்பகுதியில் ஏற்படும் சூழல் மாசடைவு குறித்து விசாரித்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குறித்த ஹோட்டல் கட்டப்படும் நிலத்தின் உரிமையைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், காலையிலும் மாலையிலும் தான் காணும் சுற்றுச்சூழலின் மாசடைவு குறித்து பொலிஸாரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கராஜ அருகே ஆனையிறவு கட்டப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் குறித்த அந்த நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய கருத்தின் பின்னர், சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...