மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பெண்கள் பலி

Date:

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இன்று காலை இடம்டபெற்ற துப்hக்கிச் சூட்டு சம்பவங்களில் எட்டு பெண்கள் உயிர் இழந்துள்ளனர். இன்று அதிகாலை வேளையில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஜோர்ஜியா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள ஸ்பா என அழைக்கப்படும் உடல் மஸாஜ் மற்றும் களியாட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட எட்டுப் பெண்களில் ஆறு பேர் ஆசிய நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்று மஸாஜ் நிலையங்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் ஒரே நபரே இந்த மூன்று தாக்குதலையும் நடத்தி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 21 வயது சந்தேக நபர் ஒருவரை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தாக்குதலுக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...