மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பெண்கள் பலி

Date:

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இன்று காலை இடம்டபெற்ற துப்hக்கிச் சூட்டு சம்பவங்களில் எட்டு பெண்கள் உயிர் இழந்துள்ளனர். இன்று அதிகாலை வேளையில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஜோர்ஜியா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள ஸ்பா என அழைக்கப்படும் உடல் மஸாஜ் மற்றும் களியாட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட எட்டுப் பெண்களில் ஆறு பேர் ஆசிய நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்று மஸாஜ் நிலையங்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் ஒரே நபரே இந்த மூன்று தாக்குதலையும் நடத்தி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 21 வயது சந்தேக நபர் ஒருவரை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தாக்குதலுக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...