அசுரன்’ தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது | விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!

Date:

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ‘விஸ்வாசம்’ படத்துக்காக டி.இமான் வென்றார்.
2019-ம் ஆண்டுக்கான 67-வது இந்திய தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ‘விஸ்வாசம்’ படத்துக்காக டி.இமானுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒத்த செருப்பு’ படத்துக்காக நடிகர் பார்த்திபனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2019 அக்டோபரில் வெளியான படம் ‘அசுரன்’. பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த தனுஷ் 2020-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றார். தற்போது அவருக்கு உச்சபட்ச அங்கிகாரமாக தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. தமிழில் சிறந்த படமாகவும் ‘அசுரன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பாராட்டுகளைப்பெற்ற விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் மட்டுமே நடித்து, அவரே இயக்கி, அவரே தயாரித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கங்கனா ரனாவத் வென்றுள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...