தந்தையை நோக்கி ஓடி வந்த 7 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற மியன்மார் பொலிஸ்

Date:

மியன்மாரில் ஏழு வயதே ஆன சிறுமியை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து கொல்லப்பட்ட மிகவும் இளவயது சிறுமி இவராவார்.

கின் மியோ சிட்டி என்ற சிறுமியே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கையில்,
மண்டேலா நகரில் உள்ள தமது வீட்டில் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டவேளை சிறுமி தந்தையை நோக்கி ஓடி வருகையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட டசின் கணக்கான மக்களில் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்குவதாக ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 261 இற்கும் அதிகம் என அரசியல் கைதிகளுக்கான உதவிக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...