புத்தாண்டை முன்னிட்டு பல பொருட்களின் விலையை குறைக்க அரசு தீர்மானம்

Date:

அரசாங்கம் எதிர்வரும் புத்தாண்டு பருவத்தில் பல பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது.

நாட்டின் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் புதிய விலைகளின் கீழ் குறித்த பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று (01) குறித்த அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, சந்தையில் தற்போது 150 முதல் 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிகப்பு சீனி ஒரு கிலோவினை 115 ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வணிக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற 100 கிராம் தேயிலை தூளின் விலை 135 ஆக காணப்படும் நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் 100 கிராம் தேயிலைத் தூள் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

தற்போது 550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லி லீற்றர் சோயா எண்ணெயை 310 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

50 மில்லி லீற்றர் கை கழுவும் திரவம் 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

SLS சான்றிதழ் கொண்ட முகக்கவசத்தின் புதிய விலை ரூ .14 ஆகும். என்றார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...