இந்தியாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோணா

Date:

இன்று காலை வெளியாகி உள்ள சில தகவல்களின் படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லடசத்து 15 ஆயிரத்து 736 அக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொவிட் 19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12.8 மில்லியனாகக் (ஒரு கோடி 28 லட்சம்) காணப்படுகின்றது.

உலகில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 1லட்சத்து 66 ஆயிரத்து 177 கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 630 மரணங்கள் சம்பவித்துள்ளன.

இந்தப் புதிய நோய்ப்பரவல் தாக்கத்தை அடுத்து இந்திய தலைநகர் புதுடில்லியில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களிலும் உள்ளுர் அதிகாரிகள் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான கண்டிப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...