இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்!

Date:

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சீனாவின் அதி உயர் பிரமுகர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் எப்போது விஜயம் செய்வார் என்பது பற்றிய சரியான திகதி இன்னும் வெளியிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும் தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவின் பின்னர் பின்னர் நிச்சயமாக சீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...