வவுனியாவில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒருவர் காயம்

Date:

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்களில்  மோதி விபத்து நேர்ந்துள்ளது.
திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக இப்பகுதியில் பல விபத்துக்கள் இடம்பெறும் நிலை காணப்பட்ட போதிலும் அப்பகுதியில் உள்ள முற்சக்கரவண்டி சாரதிகளின் ஒத்துழைப்பால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் குறித்த புகையிரதக்கடவையினை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட 40 வயதுடைய நிசாகரன் மீது புகையிரதம் மோதியுள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
வவுனியா நிருபர் 

Popular

More like this
Related

நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறதா?: டிரம்ப் பரிசீலனை.

அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த...

உயர் தர கணிதப் பிரிவில் கிளிநொச்சிக்கு முதலிடம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன்...

புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூல மாணவர்கள் சாதனை: உயர்தரப் பெறுபேறுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்!

Dilshan Mohamed சமீபத்தில் வெளியான உயர்தரப் (A/L) பெறுபேறுகளில் புத்தளம் மாவட்டத் தமிழ்...

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று...