18 வயதான யுவதி, கொவிட் தொற்றில் உயிரிழப்பு  

Date:

வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

வத்தளை ஹேமாஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த யுவதி, கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இருதய நோய்யுடன், கொவிட் நியூமோனியா ஏற்பட்டமையே, இந்த உயிரிழப்புக்கான காரணம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புடன், மேலும் மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண்ணொருவரும், பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஆண்ணொருவரும், மஹரகம பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக 638 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை...

புத்தளம் தள வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!

புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும்...