18 வயதான யுவதி, கொவிட் தொற்றில் உயிரிழப்பு  

Date:

வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

வத்தளை ஹேமாஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த யுவதி, கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இருதய நோய்யுடன், கொவிட் நியூமோனியா ஏற்பட்டமையே, இந்த உயிரிழப்புக்கான காரணம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புடன், மேலும் மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண்ணொருவரும், பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஆண்ணொருவரும், மஹரகம பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக 638 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...