கொவிட் வீரியத்தினால் சவூதியில் 18 பள்ளிவாசல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

Date:

ரியாதில் வழிபாட்டாளர்களிடையே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் வழிகாட்டல் அமைச்சு 18 பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடியுள்ளதாக சவூதி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் ரியாதில் 11 பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்தது.அதில் மூன்று கிழக்கு மாகாணத்திலும் பஹா மற்றும் ஆசிரிலும் தலா இரண்டு பள்ளிவாசல்கள் மூடப்பட்டன.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 75 நாட்களில் 782 பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடுவதற்கு வழிவகுத்தது.எனினும் 725 பள்ளிவாசல்கள் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் பிற்பாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.அதில் ரியாத் , காசிம், மக்கா,தபூக்,பஹா, கிழக்கு மாகாணம்,ஆசிர் மற்றும் வடக்கு எல்லைகள் 24 பள்ளிவாசல்கள் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என சவூதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...