இலங்கையில் covid-19 தடுப்பூசியின் முதலாவது சொட்டு செலுத்தப்பட்டவர்கள் மத்தியில் சிறந்த முறையில் நோய் எதிர்ப்பு சக்தி செயற்பட ஆரம்பித்துள்ளது

Date:

பொது சுகாதார ஊக்குவிப்பு பணியகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இதுவரை மேல் மாகாணத்தில் மட்டும் முன்வரிசை சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட 9 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு covid-19 Astra Zeneca முதலாவது சொட்டு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பரவிவரும் வீரியம் கொண்ட உருமாற்ற கொரோணா தாக்கம் இவர்களில் எவருக்கும் இதுவரை ஏற்படவில்லை என்று சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை எதிர்காலத்தில் இவர்களுக்கு அவ்வாறான தாக்கம் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் அளவுக்கு இவர்களுடைய உடலில் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தற்போது பரவிவரும் வீரியம் கொண்ட குரோனா தாக்கம் ஏற்பட்டாலும் கூட அது மிகக் குறைந்தளவான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகின்றது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நடத்தி இருக்கின்ற ஆய்வுகளின்படி இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட வர்களின் உடம்பில் வீரியம் கொண்ட மற்றும் உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி கூட ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் கட்டாயமான ஒரு விடயமாக தற்போது பார்க்கப்படுகின்றது. தடுப்பூசி தவிர இப்போதைக்கு கொரோணாவில் இருந்து தப்புவதற்கு வேறு வழி எதுவும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...