பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைகளை பாகிஸ்தான் வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது!

Date:

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் மத்திய ஜெரூசலத்தை மூடியுள்ளது.இது குறித்து பாகிஸ்தான் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன பிரதேசங்களின் மோசமான நிலை குறித்து பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருகிறது.பிரார்த்தனைக்காக வரும் மக்களை துன்புறுத்துவது , அப்பாவி பாலஸ்தீனியர்களை கைது செய்வது என்பன அடிப்படை மனித உரிமை களை மீறும் செயற்பாடாகவே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை செயல்களை வன்மையாக கண்டித்தும் பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனியர்களின் உரிமையை பாதுகாக்கவும் , வென்றெடுக்கவும் பாகிஸ்தான் உறுதியுடன் செயற்படுவதாகவும் , எல்லைப் பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் மற்றும் ஒ.ஐ.சியினுடைய தீர்மானங்களின் பிரகாரம் இரு மாநிலமும் இதற்கு தீர்வு காண வேண்டியுள்ளது.”குட்ஸ்-அல்-ஷெரீப் ஒரு சாத்தியமான மற்றும் சுயாதீனமான பாலஸ்தீனிய அரசின் தலைநகரமாக உள்ளது என்றும் இந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

ரமழான் தொடக்கத்திலிருந்து பாலஸ்தீனியர்களை டமஸ்கஸின் வாயில் பகுதியில் பண்டிகை நடவடிக்கைகளில் ஈடுபட இஸ்ரேலிய படைகள் தடை விதித்துள்ளது.பிளஷ் பொயின்ட் நகரில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல்களை நடாத்திய போதே நிலைமை மேலும் மோசமடைந்தது.கடந்த வியாழக்கிழமை முதல் ஜெரூசலமில் இஸ்ரேலிய படைகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையிலான மோதலில் 130க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதோடு, 100ற்கு அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் உள்ளிட்ட பலஸ்தீன பிரதேசங்கள் 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வருகின்றன.இஸ்ரேலிய ஆக்கிரமிப்பானது சட்டவிரோதமானது என சர்வதேச சட்டத்தினால் கருதப்படுகிறது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...