இந்தியாவில் தற்போது பரவி வரும் வைரஸ் இலங்கையில் பரவுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை-வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவிப்பு!

Date:

இந்தியாவில் உருமாற்ற வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவுவதற்கான சான்றுகள் இருந்தாலும் இலங்கையில் அந்த வைரஸ் பரவுவதற்கான இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லையென நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு நிபுணத்துவ வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் முழுமையான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இதன் மூலம் நாட்டின் வைரஸ் பரவலின் சரியான கணிப்பை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் பரவிவருகின்ற வைரஸ் புதிய மாறுபாடாக கூட உருமாறலாம் என்று ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.பண்டிகை காலத்திற்குப் பிறகு கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் இணங்காணப்பட்ட தொற்றாளர்களிலிருந்து நாம் இதனை கணித்திருக்கிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை ‌பின்பற்றும் போது வைரஸின் பரவலை கண்டிப்பாக தடுக்க முடியும் எனவும் வைரஸ் பரவலின் சரியான கணிப்பு வெளியாகும் வரை இரண்டு மீட்டர் தூரத்தை பேணுமாறும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...