இந்தியாவில் தற்போது பரவி வரும் வைரஸ் இலங்கையில் பரவுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை-வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவிப்பு!

Date:

இந்தியாவில் உருமாற்ற வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவுவதற்கான சான்றுகள் இருந்தாலும் இலங்கையில் அந்த வைரஸ் பரவுவதற்கான இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லையென நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு நிபுணத்துவ வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் முழுமையான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இதன் மூலம் நாட்டின் வைரஸ் பரவலின் சரியான கணிப்பை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் பரவிவருகின்ற வைரஸ் புதிய மாறுபாடாக கூட உருமாறலாம் என்று ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.பண்டிகை காலத்திற்குப் பிறகு கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் இணங்காணப்பட்ட தொற்றாளர்களிலிருந்து நாம் இதனை கணித்திருக்கிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை ‌பின்பற்றும் போது வைரஸின் பரவலை கண்டிப்பாக தடுக்க முடியும் எனவும் வைரஸ் பரவலின் சரியான கணிப்பு வெளியாகும் வரை இரண்டு மீட்டர் தூரத்தை பேணுமாறும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...