இந்தியாவில் தற்போது பரவி வரும் வைரஸ் இலங்கையில் பரவுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை-வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவிப்பு!

Date:

இந்தியாவில் உருமாற்ற வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவுவதற்கான சான்றுகள் இருந்தாலும் இலங்கையில் அந்த வைரஸ் பரவுவதற்கான இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லையென நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு நிபுணத்துவ வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் முழுமையான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இதன் மூலம் நாட்டின் வைரஸ் பரவலின் சரியான கணிப்பை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் பரவிவருகின்ற வைரஸ் புதிய மாறுபாடாக கூட உருமாறலாம் என்று ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.பண்டிகை காலத்திற்குப் பிறகு கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் இணங்காணப்பட்ட தொற்றாளர்களிலிருந்து நாம் இதனை கணித்திருக்கிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை ‌பின்பற்றும் போது வைரஸின் பரவலை கண்டிப்பாக தடுக்க முடியும் எனவும் வைரஸ் பரவலின் சரியான கணிப்பு வெளியாகும் வரை இரண்டு மீட்டர் தூரத்தை பேணுமாறும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...