கேரள சட்டசபைத் தேர்தல் 2021 : வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவாரா பினராயி விஜயன்?

Date:

 

பா. முகிலன்

 

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளைச் செய்வதிலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன.

 

கேரள சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சியமைத்தால் அது சமீபத்திய கேரள அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு சரித்திர சாதனையாக இருக்கும் என்பதால், கருத்துக் கணிப்பு நிஜமாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டசபைக்கு, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அணியும், காங்கிரஸ்

தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜக 3-வது அணியாகவும் களம் இறங்கின.

கேரளாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள் அம்மாநில மக்கள். ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளைச்

செய்வதிலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்ட

பல்வேறு நடவடிக்கைகள் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன.

இதன் எதிரொலியாக சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதே நிலை சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் அதையே உறுதிப்படுத்தின.

 

கேரளா சட்டசபைத் தேர்தல் 2021

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கருத்துக்கணிப்பு நிஜமாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

அப்படி கருத்துக்கணிப்பு நிஜமானால், அது வரலாற்றுச் சாதனையாகவே இருக்கும்!

நன்றி விகடன்

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...