உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

Date:

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே 5ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இப் பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது எனினும் முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு கணக்கிடப்பட்ட z-scores மதிப்பெண்கள் இருமுறை சரிபார்க்கப்பட‌ வேண்டும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.இந் நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறதோடு செயல்முறை முடிந்ததும் முடிவுகளை மே மாதம் 5 அல்லது அதற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

முடிவுகளின் பின்னர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.பரீட்சை முடிவுகளை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் (www.doenets.lk ) பார்வையிடலாம்.

 

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...