உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

Date:

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே 5ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இப் பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது எனினும் முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு கணக்கிடப்பட்ட z-scores மதிப்பெண்கள் இருமுறை சரிபார்க்கப்பட‌ வேண்டும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.இந் நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறதோடு செயல்முறை முடிந்ததும் முடிவுகளை மே மாதம் 5 அல்லது அதற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

முடிவுகளின் பின்னர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.பரீட்சை முடிவுகளை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் (www.doenets.lk ) பார்வையிடலாம்.

 

 

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...