ரயில் பாலம் இடிந்து விழுந்தது 15 பேர் மரணம் | மெக்சிகோ தலைநகரில் பரிதாபம்

Date:

மெக்சிகோவின் தலைநகரில் பிரதான ரயில்வே மேம்பாலம் ஒன்றுக்கு மேலாக ரயில் வண்டி சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்ததால் கீழ வீதியில் இருந்த 15 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த ரயில் வண்டி பாலத்திற்கு மேலாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்து. கீழே சுறுசுறுப்பான வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பல இதில் சிக்கி கொண்டன.

இதனால் 15 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பல ரயில் பெட்டிகள் பாலத்திற்கு கீழாக வீதியில் விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்களும் தீயணைப்பு படையினரும் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து
இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...