“எமது அணி வீரர்கள் அனைவரும் வீடு திரும்பிய பின்னரே நான் எனது ஊரிற்கு செல்வேன்”-அணித்தலைவர் தோனி!

Date:

இந்தியாவில் கொவிட் தொற்றின் நிலை தீவிரமென்பதால் ஐ.பீ.எல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் பத்திரமாக வீடு போய் சேர்ந்த பிறகே நான் எனது வீடு திரும்புவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (05) காலை காணொளி அழைப்பு மூலம் தனது அணி வீரர்களுடன் கதைத்த தோனி ” முதலில் வெளிநாட்டு வீரர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் பிறகு உள்ளூர் வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

அணி வீரர்கள் அனைவரும் சென்ற பிறகு தான் நான் எனது ஊரான ராஜ்சிக்கு செல்வேன் அதுவரை டெல்லியில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மைக்கல் ஹஸி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குப் போக ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில் இன்று (06) மாலை தோனி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...