சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்-மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவிப்பு!

Date:

சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணனியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்று கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் தொடர்ச்சியாக அல்லது இடைவெளிவிட்டு இதனைப் பயன்படுத்துவதனால், இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கையடக்க தொலைபேசி மற்றும் கணணியை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதனால், நீண்டகால தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மனநல வைத்தியர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நாட்களில் குழந்தைகள் வீட்டினுள்ளேயே சிக்கி இருப்பதனால் அவர்கள் கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...