புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளியில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வுகள்!

Date:

கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக வேண்டி நாடு தழுவிய பிரார்த்தனையின் ஓர் அங்கமாக புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளியில் பிரார்த்தனை நிகழ்வுகள் சனிக்கிழமை (08) மாலை  05.46 தொடக்கம் இடம்பெற்றது.

 

கொவிட் 19 தொற்றிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க விஷேட பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

பெரிய பள்ளியின் பிரதம பேஷ் இமாம்களான அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.சிஹான், அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.ஜெஸ்கான் ஆகியோர் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை பேணி இந்நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது.

உலகை உலுக்கி வரும் கொரோனா தொற்று நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர, உலக மக்களின் நன்மையையும் இலங்கை வாழ் மக்களின் நன்மையையும் வேண்டி சர்வமத பிரார்த்தனையை ஒரே நேரத்தில் சனியன்று மாலை 5.46 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கையிலுள்ள சகல மதத் தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரூசி சனூன் புத்தளம்

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...