மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேல் படையினர் இன்று காலையும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Date:

  1. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மூன்றாவது புனித ஸ்தலமான al-aqsa பள்ளிவாசலில் இன்று காலை வழிபாட்டுக்காக வந்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிபார்த்து சுடும் பிரிவினரும் இந்த தாக்குதலில் பங்கேற்றுள்ளனர். ரப்பர் தோட்டாக்கள் கண்ணீர்புகை குண்டுகள் என்பனவும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீனத்தில் இன்று ரமழான் மாதத்தின் 28 ஆவது நாள் ஆகும். இன்றைய தினம் காலையில் வழிபாட்டுக்காக குழுமியிருந்த மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

அல் அக்ஸா பள்ளிவாசல் பகுதியை சுற்றி யூதர்கள் ஒரு ஊர்வலத்திற்காக காத்திருந்த வேளையிலேயே முஸ்லீம்கள் மீது யூத படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். கிழக்கு ஜெருசலத்தை 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் படையினர் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த தினத்தை நினைவு கூறும் வகையில் யூதர்கள் ஜெரூஸலம் தினம் கொண்டாடுவது வழக்கமாகும். அந்த தினத்தை அவர்கள் வேண்டுமென்றே முஸ்லிம்களை ஆத்திரமுட்டச் செய்யும் வகையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் ஊடாக ஊர்வலமாகச் சென்று கொண்டாடுவதுண்டு அவ்வாறான ஒரு ஊர்வலத்துக்கு இன்று அவர்கள் தயாராக இருந்த வேளையிலேயே இஸ்ரேல் படையினர் முஸ்லிம்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். சற்றுமுன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் படி தொடர்ந்தும் அந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை காணப்படுவதாகவும் இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் அந்த பிரதேசத்தை சுற்றி வட்டமிட்டட வண்ணம் இருப்பதாகவும் ஊர்வலம் நடக்கும் பட்சத்தில் அது பெரும் கைகலப்பாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காணொளி 👇

https://www.aljazeera.com/news/2021/5/10/israeli-forces-raid-al-aqsa-compound-live

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...

ஆன்மீகம் மற்றும் லௌகீக முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் ஆஷூரா தின சிந்தனைகள்

அகீல் பின் ஸாலிம் அல்-ஷம்மரி (அரபு மூலம்) நன்றி- அல்-முஸ்லிம் இணையதளம் (குறிப்பு: இன்றைய...

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர்...

இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் தேவை: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தல்!

இலங்கையில் பௌத்த மகா சங்கத்தினர் (துறவிகள்) சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான முறைகேடு குற்றச்சாட்டுகள்,...