கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு  உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

Date:

திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விளாங்குளம்,முத்து நகர் மற்றும் இடிமண் ஆகிய பிரதேசங்களுக்கான உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதி தவிசாளர் எம்.நெளபர் தலைமையில் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஸன பாண்டி கோரலவின் பங்கேற்புடன் சுமார் 600 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

இதன் போது இலங்கைக்கான சவூதி தூதுவரகத்தின் சிரேஷ்ட்ட கணக்காளர் கலாநிதி அப்துல் அஸீஸ் கலந்து கொண்டு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இதற்கான நிதியுதவியினை பல்கேரியா நாட்டின் இஸ்மாயில் பிஸ்லூ தொண்டு நிறுவனம் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடதக்கது.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...