நேற்றைய தினம் நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் விபரம்

Date:

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 80,277 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 3,335 பேருக்கு ரஸ்யாவின் ஸ்புட்னிக் V (sputnik v) தடுப்பூசியும், 76,942 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியும் நேற்றைய தினம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இதுவரை 14,673 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 150,606 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் 10,189 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 231,557 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...