அரசாங்கம் சர்வாதிகாரமாகவும் ஒரு தலைபட்சமாகவும் நகர்கிறது-எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!(வலையொளி இணைப்பு)

Date:

குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் ஆனால் சட்டத்திற்கு புறம்பாக அரசாங்கம் நடத்திய சட்டவிரோத கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கம் சர்வாதிகாரமாகவும் ஒரு தலைபட்சமாகவும் நகர்கிறது என்றும் அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்நகரும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்தே இதனைத் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல், பெலிஸ்துறையினர் ஒரு சந்தேக நபரைக் கொல்லும்போது, ​​அந்த அரசு சட்டவிரோதமாக ஆட்சி செய்யும் ஒரு பாசிச அரசாக மாறுகிறது, மேலும் இதுபோன்ற கொலைகள் மூலம், அரசியல்வாதிகள் மற்றும் சந்தேக நபரைக் கையாளும் உயர்மட்ட மோசடி செய்பவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியுமான வாய்ப்புகள் உருவாகிறது.

இது சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து, சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை இல்லாமலாக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

வலையொளி இணைப்பு-

https://youtu.be/Knjmqd8N1LY

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...