இஸ்ரேல் தொடர்பாக ஜோ பைடனின் கருத்துகளுக்கு ரவுப் ஹகீம் கண்டனம்!

Date:

இஸ்ரேலின் அடாவடித்தனம் பற்றியும் அது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கருத்துக்கள் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு” என கிளிப்பிள்ளைப் போன்று அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் “இந்தப் பிரச்சினை விரைவிலோ அல்லது பின்னரோ தீரும்” எனவும் தெளிவில்லாமல் எதையோ உளறியிருக்கின்றார். சுதந்திரமான உலக நாடொன்றின் தலைவர் இவ்வாறு பரிதாபமான தொனியில் முணுமுணுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இனரீதியான ஒதுக்களைக் கடைப்பிடித்துவரும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதை நிறுத்துங்கள்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பெரும்பாலும் தூண்டப்படாமலேயே தங்குதடையின்றித் தொடர்கின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்தில் மனிதப் படுகொலையை நிறுத்த ஐ.நா. சபையும், இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தை திசைத்திருப்புவதற்காக ஹமாஸ் மீது பாரபட்சமான முறையில் பழி சுமத்துவதை ஐக்கிய இராச்சியத்திற்கான பலஸ்தீனத் தூதுவர் தோலுரித்துக் காட்டியுள்ளார். “நோயின் அறிகுறிகளைத் தேடுகின்றீர்களே தவிர, நோய் எங்கேயிருக்கின்றது என்பதைக் காண்கிறீர்கள் இல்லை” என்கிறார் அவர்.

 

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...