வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் எதிர்க்கொள்ள தயார்!

Date:

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருப்பதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யஸரட்ன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வெள்ள நிலைமை ஏற்பட்டால் கொவிட் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் தினங்களில் மழையுடனான காலநிலை அதிகரித்து அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், நிவாரண நடவடிக்கைகளுக்காக பத்து கடற்படைக் குழுக்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் உடுகம பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலரை மீட்டுள்ளார்கள்.

வரக்காபொல – கஸ்வான பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவின் காரணமாக இரண்டு பேர் மண்ணில் சிக்கிய நிலையில், இராணுவத்தினர் அவர்களை மீட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...