போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய 306 பேர் கைது

Date:

கடந்த 24 மணித்தியாலயங்களில் போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 9,588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் மேல் மாகாணத்தை விட்டு வௌியேறும் 14 இடங்களில் நேற்று பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 1,826 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனங்களில் பயணித்த 3,525 பேர் சோதனைக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளதுடன் 42 வாகனங்களில் பயணித்த 92 பேர் மாகாண எல்லையில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...