நாளை 51 ரயில்கள் சேவையில்!

Date:

நாளை (17) தொடக்கம் அத்தியாவசிய பணிக்காக செல்லும் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சிலவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த ரயில்களில் தொழிலுக்கு செல்பவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என ரயில்வே பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

சுமார் 51 ரயில்கள் நாளை இயக்கப்பட உள்ளதாகவும் மாலையிலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிலுக்காக செல்லும் பயணிகளுக்காக நாளை தொடக்கம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...