அலுவலக அடையாள அட்டை அல்லது உயர் அதிகாரியின் கடிதத்தைக் காண்பித்து மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும்

Date:

ஆகக் குறைந்த பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும்.

ஆகக் குறைந்த மற்றும் அத்தியவசிய பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து கடந்த வாரம் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன் படி அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் நடைபெறும் என அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போர் திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர் அல்லது உயர் அதிகாரி வழங்கும் கடிதத்தை காண்பித்து பயணிக்க முடியும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அல்லது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணம் செய்ய முடியும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

இம்முறை உயர்தரப் பரீட்சையில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர்களின் இருப்பிடம் மாற்றமடைந்திருந்தால்...