வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் – சுற்றாடல் அமைச்சு

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறக்கூடிய அலங்கார செயற்பாடுகளின்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை முற்றாக தவிர்க்குமாறு பொதுமக்களிடம், சுற்றாடல் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுற்றுச்சூழலில் அதிகளவில் பொலித்தீன்கள் சேர்வதை தடுக்கும் வகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் வருடாந்தம் 58 பில்லியன் ரூபா செலவில் 177,197 டொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் இறக்குமதி செய்வதாக தெரிவித்துள்ளது.

எனினும் 12,636 டொன் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன்களையே மீள் சுழற்சி செய்ய கூடியதாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 92.29 சதவீதமானவை சுற்றுச்சூழலில் கலந்துவிடுவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...