சினோவெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க நடவடிக்கை!

Date:

சினோவெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அரசாங்கத்தின் அனுசரணையுடன் விரைவில் உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

அதற்கிணங்க அதுதொடர்பான உடன்படிக்கையொன்றை தயாரித்து கைச்சாத்திடுவதற்கு அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அதிகாரம் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம், சீனாவின் சினோவெக் பயோடெக் நிறுவனம் மற்றும் கெலுப் லைவ் சயன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்துள்ள

அமைச்சரவை பத்திரத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...