விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அவர்களின் வேண்டுகோள்!

Date:

உங்களின் வீடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம், என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

வீடுகளில் மரணிக்கும் பெரும்பாலான நோயாளர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே, கொவிட்-19 தொற்றுறுதியாகி இருந்தமை கண்டறியப்படுகிறது.

இதன் காரணமாகவே, கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

நோய் அறிகுறிகளை கவனத்திற்கொள்ளாது இருப்பதன் காரணமாகவே இத்தகைய நிலை ஏற்படுகிறது.

இதனால், நோய் காரணமாக பாதிக்கப்படும் முதியோர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்கள் ஆகியோரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...