தீப்பற்றி அழிந்து போன கப்பலினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழு!

Date:

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்ட கப்பலினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, சமுத்திரவியல் தொடர்பான நிபுணர்களும், பல்கலைக்கழக கலாநிதிகளும் இந்தக் குழுவில் நியமிக்கப்படவிருக்கின்றனர்.

 

கடல்வாழ் உயிரினங்கள் உட்பட கடல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும்.

 

இதேவேளை, ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மாசைக் கணிப்பிட்டு நஷ்டஈடு பெறுவதற்கான சிபார்சையும் இந்தக் குழு முன்வைக்கும்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...