கொவிட் 19 ஜனாஸாக்களை இறக்காமத்தில் அடக்குவது தொடர்பாக  அம்பாறை GA இன் தெளிவுபடுத்தல்!

Date:

கொவிட் – 19 இனால் உயிரிழப்பவர்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான எந்த அனுமதியினையும் நான் வழங்கவில்லை” என அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

 

“எனினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரை இறக்கமத்தில் நல்லடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் பரிந்துரை செய்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டார்.

 

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை நேற்று 29.05.2021 அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்”.

 

இது பற்றி மாவட்ட செயலாளர் கருத்து தெரிவிக்கையில், “கொவிட் – 19 இனால் உயிரிழப்பவர்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான பரிந்துரையினையே சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கினேன்.

 

மாறாக அடக்கம் செய்வதற்கான எந்த அனுமதியினையும் வழங்கவில்லை. குறித்த கடிதத்தின் பிரதிகளை கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.

 

இறக்காமத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட செயலாளரின் பரிந்துரைக்கமைய கிண்ணியாவின் மகமாறு பிரதேசத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த 25ஆம் திகதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...