பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை!

Date:

வவுனியாவில் பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தோர் உள்ளடங்களாக 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை இன்று (03) சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

வவுனியா மாவட்டத்தில் தினந்தோறும் 130 பிசீஆர் முடிவுகள் 24 மணிநேரத்தில் வழங்க சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன ​அடிப்படையில் 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் வவுனியா, குருமன்காடு பகுதியில் பயணத்தடை நேரத்தில் வீதியால் பயணித்தோர், அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், வங்கி காவலாளர்கள், நிறுவனங்களில் பணியாற்றுவோர், சில கிராமங்களைச் சேர்ந்தோர், வவுனியா நகரம் என எழுமாறாக 130 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இதன் முடிவுகளை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...