எக்ஸ்ரா செனகா இரண்டாவது டோஸுக்கு பதிலாக ஸ்புட்னிக் V ?

Date:

கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஸ்புட்னிக் V தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் டோஸ் செலுத்துவதற்காக சுமார் 6 இலட்சம் கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா தடுப்பூசிகள் இலங்கைக்கு தேவைப்படும் என குறித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டுவர அரசு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அதனை பெற்றுக் கொள்ள முடியாது எனின் ஸ்புட்னிக் V தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...