வெளிநாடுகளிலிருந்து வருகைத்தரும் கொவிட் தடுப்பூசி பெற்றவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமன்று!

Date:

கடந்த 14 நாட்களுள் இந்தியா,வியட்நாம்,தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றிருந்த எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கை வருவதற்கு அனுமதி இல்லையென அண்மையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.

எனினும் மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த அதேவேளை கொவிட் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளவர்கள் தடுப்பூசிகளின் இரண்டு மாத்திரைகள்) இலங்கை வர அனுமதிக்கப்படுவர் என்றும் இவர்கள் கட்டாய சுயத்தனிமைப்படுத்தலை கடைப்பிடிப்பது அவசியமில்லை எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய கடந்த 14 நாட்களுக்குள் மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த இலங்கையர்கள் அல்லது இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் மற்றும் இடைமாறல் பயணிகள் மாத்திரம் இலங்கை திரும்பும்போது கட்டாய சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட தேவையில்லை.

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வருகைத்தருவோர் கட்டாயமாக 14 நாட்கள் சுயத்தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...