இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத் தலைவருக்கு விளக்கமறியல்!

Date:

சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில்,

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவரான ரஜீவ் மெத்தீவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட மேலும் பல அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் கடந்த 4 ஆம்திகதி காலை ஊடக அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது.

பின்னர் இந்த செய்தி பொய்யானது என அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய, ரஜீவ் மெத்தீவ், மறுதினம் தனது சட்டத்தரணியுடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்கியதையடுத்து கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...