13 நாட்களில் 500 கொரோனா மரணங்கள் | எச்சரிக்கை விடுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Date:

நாட்டில் கொவிட் தொற்று தொடர்பிலான தரவுகளை வெளியிடும் நிறுவனங்களின் தகவல்களின் பிரகாரம், கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா உயிரிழப்புக்களின் உண்மை தன்மை தெளிவில்லாது காணப்படுகின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபத் தலைவர் டொக்டர் சந்திம எப்பிட்டிகடுவ தெரிவிக்கின்றார்.

இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தரவுகளுக்கு அமைய,நாட்டில் முதல் 500 கொரோனா உயிரிழப்புக்கள், 343 நாட்களில் பதிவானதாக அவர் கூறுகின்றார்.

மேலும், அடுத்த 500 கொரோனா உயிரிழப்புக்கள், 72 நாட்களில் பதிவானதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.எனினும், மூன்றாவது 500 கொரோனா உயிரிழப்புக்கள் 13 நாட்களிலேயே பதிவானதாக அவர் கூறுகின்றார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 500 கொரோனா உயிரிழப்புக்கள் இதைவிடவும் குறைந்த நாட்களிலேயே பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கின்றது.

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...