மேல் மாகாணத்திற்குள் உள் நுழைவு மற்றும் வெளியேறும் சில பகுதிகளின் வீதிகள் மூடல்!

Date:

மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் 14 பகுதிகளில் நேற்று வீதி தடைகளை ஏற்படுத்தி மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேபோன்று இவர்கள் வந்த 1024 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண எல்லைகளை மீறி பயணித்த 91 பேர் வந்த வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாள காலப்பகுதியல் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1027 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இதுதொடர்பாக 30,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம பகுதியில் ட்ரோன் கெமராக்கள் மூலம் நேற்றைய தினம் (11) நடத்தப்பட்ட கண்காணிப்பின் போது, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...