நகைச்சுவை செய்வதை நிறுத்தி, எண்ணெய் விலையை குறைக்கவும் | எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Date:

ஒன்றுக்கு ஒன்று தோல்வியடையா வன்னம் அரசாங்கம் மக்களுக்கு நகைச்சுவைகளைச் செய்து வருகிறது. எண்ணெய் விலை உயர்வு குறித்து பொஹோட்டுவவின் செயலாளர் ஒரு அபத்தமான அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி ஊடக பிரிவு இரண்டாவது, மிகவும் அபத்தமான அறிவிப்பை வெளியிட்டது.இந்த அறிவிப்புக்கு இணங்க,தேசிய உற்பத்தியின் சார்புடைய ஒரு முதலீடு மற்றும் நுகர்வு பொருளாதாரமாக மாற்றவே எண்ணெய் விலையை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த பேரழிவு தருணத்தில், மக்களின் வாழ்க்கையில் தாங்க முடியாத சுமையை சுமத்தியுள்ள அரசாங்கம், ‘உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக’ எண்ணெய் விலையை அதிகரித்துள்ளது என்று பகுத்தறிவற்ற வாதத்தை முன்வைத்துள்ளது.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கிறது என்ற அடிப்படையில் உரத்திற்கு தடை விதித்துள்ள அரசாங்கம் “காபனிக் உரங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் போகிறது. நாட்டில் நுகர்வுக்கு போதுமான உள்ளூர் தேங்காய் எண்ணெய் இருக்கும்போது தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.உள்ளூர் விவசாயிகள் நெல் அறுவடை பெறும்போது அரிசியை இறக்குமதி செய்கிறார்கள்.
ஆகவே, அரசாங்கம் எண்ணெய் விலையை உயர்த்தி, உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கிறது என்று சொல்வது இன்னும் அபத்தமானதல்லவா?
இது பகல் நேரத்தில் நடந்த ஒரு கொள்ளை.மக்களின் துன்பங்களை மீறி ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்ய கடன் வழங்கிய அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பதன் மூலம் தனது துரோக தன்மையை நிரூபித்துள்ளது.

உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த, பெட்ரோலியத்திற்கான உள்ளூர் மாற்றுகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன், விலை உயர்வு உள்ளூர் உற்பத்தியை மேலும் முடக்கும். இரசாயன உரங்களை தடை செய்வதன் மூலம், அரசாங்கம் கவனக்குறைவாக விவசாயிகளை கஷ்டங்களுக்கு தள்ளியுள்ளது போதாமல், உள்ளூர் பொருட்களுக்கு மாற்றீட்டை உருவாக்காமல் எண்ணெய் விலையை உயர்த்துவதன் மூலம் அரசாங்கம் முழு நாட்டையும் கஷ்டங்களுக்குள் மூழ்கடித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் உலக சந்தையில் எரிபொருள் விலையை ஒப்பிடுகையில், குறைந்தபட்ச டீசல் விலையை லீட்டருக்கு ரூ .104 முதல் ரூ .91.92 ஆகவும், ஆக்டேன் 92 பெட்ரோல் லீட்டருக்கு ரூ .137 முதல் ரூ .124.30 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ .70 முதல் ரூ .58.80 ஆகவும் குறைத்து, ஒரு லீட்டருக்கு இவ்வாறான குறைப்புகளை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றும் அன்றைய நாட்களில் பலமுறை வலியுறுத்தப்பட்ட போதிலும், அரசாங்கம் கோரிக்கையை அவமதிப்புடன் நிராகரித்தது,மாத்திரமல்லாது சில அமைச்சர்கள், “எண்ணெய் விலையை குறைக்காமல் இருப்பது மக்கள் வீனாக குழம்பாமல் நடந்து கொள்வதற்காக” என்று கூறினர்கள்.

எண்ணெய் விலைகள் குறையும் போது அவ்வாறு பெரும் நிதிகளை நிதியளிப்பதற்காக எண்ணெய் விலை உறுதிப்படுத்தல் நிதியம் அமைக்கப்படும் என்றும் எண்ணெய் விலை உயர்வு ஏற்ப்பட்டால் மேலதிக நிதிகளை நிதியத்திலிருந்து வழங்கி மக்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மார்ச் 19, 2020 அன்று தெரிவித்தார்.
அந்த நிதியத்திற்கு என்ன ஆனது என்று நாங்கள் கேட்கிறோம்.மனித வாழ்க்கையுடன் இதுபோன்ற நகைப்புடன் செயற்ப்படும் இத்தகைய ஆட்சி
நாட்டின் வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான தனது முடிவை மாற்றியமைக்கவும், மக்களை சித்திரவதை செய்வதற்கான தனது முடிவை மாற்றியமைக்குமாறும் நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

சஜித் பிரேமதாச

Popular

More like this
Related

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...