எம்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இன்று முதல் இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளது

Date:

9883 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயலத் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம்  நீர்கொழும்பு, பத்தலை , ஜா-எல மற்றும் கந்தானை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

அதற்கமைய நீர்கொழும்பில் 6042 வத்தளையில் 1409 குடும்பங்களுக்கும் கந்தானையில் 233  குடும்பங்களுக்கும் சாலையைச்  சேர்ந்த 69 மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

இழப்பீட்டுகாக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார். பிரதேச செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து கப்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...