பயணத் தடை காரணமாக இலங்கைக்கு 45 ஆயிரம் கோடி நட்டம் | அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

Date:

நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு  அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமெடுத்துள்ளதை அடுத்து, கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் அரசாங்கத்தினால் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாளாந்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் மேலதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஊடாக, நாளாந்தம் 15 லட்சம் கோடி ரூபா கிடைக்கப் பெற்று வந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்களை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...