கைது செய்யப்பட்ட நகர சபை உறுப்பினர்கள் பிணையில் விடுதலை!

Date:

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட கொலன்னாவை நகர சபை உறுப்பினர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று (16) பிற்பகல் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான மீதொட்டுமுல்ல பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்த இயந்திரம் ஒன்றை திருடியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இயந்திரத்தை கொள்வனவு செய்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...